sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

/

ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

1


ADDED : மே 05, 2025 06:02 AM

Google News

ADDED : மே 05, 2025 06:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள், பெரும்பாலான ரோட்டோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப் பகுதிகள் , நான்கு வழி, நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என அனைத்து ரோட்டோரங்களிலும் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களால் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கோடை காலங்களில் இடி ,மின்னல், காற்றுடன் மழை பெய்யும் என்பதால் சாலையோரங்களில் உள்ள விளம்பரப் பேனர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில இடங்களில் இருந்த மெகா விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் அகற்றப்படாததால் அவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.

இந்த பேனர்களை முறையாக பராமரிப்பது இல்லை. அவை சேதமடைந்து கிழிந்து காற்றில் பறப்பதால் ரோடுகளில் செல்லும் வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.






      Dinamalar
      Follow us