sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று

/

குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று

குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று

குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று


ADDED : நவ 13, 2024 04:17 AM

Google News

ADDED : நவ 13, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்கம்பத்தில் செடிகள் : பழநி டி.எஸ்.பி. கேம்ப் முல்லை நகரில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளன .இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதன் அருகே செல்வோர் பயத்துடனே செல்கின்றனர் . செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். --கண்ணன், பழநி.

............--------

சேதமான ரோடு : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி குளத்துக்கரையில் இருந்து கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.இதனால் நடந்து செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர்.

-ஆர்.ரவிச்சந்திரன், முத்துவீரன்பட்டி.

...........---------

திறந்தவெளியை நாடும் மாணவர்கள் : அய்யலுார் குளத்துபட்டி துவக்கப்பள்ளி சுகாதார வளாகம் சேதமடைந்து பயனற்று கிடப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் சுகாதாரவளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

-பாண்டி, அய்யலுார்.

................

குப்பையை குவித்து எரிப்பு : நத்தம் அருகே பூதகுடி ஊராட்சி அலுவலகம் அருகிலே குப்பை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து புகை பரவுவதால் சுவாசப் பிரச்னை , நோய் பரவும் அபாயம் உள்ளது.

-ராஜேஸ்வரி, பூதகுடி.

................----------

ரோடு பள்ளத்தால் சிரமம் : திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை எஸ். எம்.பி. பள்ளி அருகே ரோடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன . பெரும் விபத்துக்கு முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-பி. பாலமுருகன், ஒய்.எம்.ஆர்.பட்டி.

.............

----------

திறந்தவெளி கிணறால் விபத்து : திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் வழியில் வேடப்பட்டி அருகே ரோடு வளைவில் திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம் உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் இங்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், திண்டுக்கல்.

...........-----------

சாக்கடை இன்றி கழிவுநீர் தேக்கம் : நத்தம் அருகே கம்பிளியம்பட்டியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை அமைத்து தர வேண்டும்.

-வெ.பாஸ்கரன், சுக்காம்பட்டி.

.............---------






      Dinamalar
      Follow us