/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நலத்திட்ட பணிகள் துவக்கம்
/
பழநியில் நலத்திட்ட பணிகள் துவக்கம்
ADDED : பிப் 19, 2024 05:15 AM
பழநி : பழநியில் நலத்திட்ட பணிகளை எம்.எல்.ஏ செந்தில்குமார் துவங்கி வைத்தார்.
ரேஷன் கடைகளை கோதைமங்கலம் ஊராட்சியில் கணபதி நகர், மருத்துவ நகர் பகுதிகளில் துவங்கி வைக்கப்பட்டது. கோதைமங்கலம் ஊராட்சியில் ரூ 84.77 லட்சம் மதிப்பில் ரோடு பணிகள், பாலசமுத்திரம் அண்ணாநகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை அமைத்தல், 15வது வார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைத்தல்,சிவகிரி பட்டி ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சிவகிரி பட்டி இடும்பன் நகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடந்தது.
எம்.பி.,வேலுச்சாமி,தாசில்தார் பழனிச்சாமி பங்கேற்றனர்.

