ADDED : மார் 02, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.22.85 கோடியில் குளிர்சாதன காத்திருப்போர் அறை, மின்சார அறை உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு நடந்தது. பழைய குட்ஷெட், புதிய கட்டடங்கள் கட்டும் பகுதிகளில் இன்ஜினியர் களோடு ஆலோசனை நடத்தினார். மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா, முதன்மை கோட்ட வர்த்த ஆய்வாளர் சத்திய மூர்த்தி,ஸ்டேஷனர் மேலாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.

