sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

/

பழநியில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

பழநியில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

பழநியில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு


ADDED : செப் 22, 2024 03:29 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநியில் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரி வீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று (செப்.20. ) கிரி விதி பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன் பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மனு அளித்தனர்.

என் மண் என் உரிமை அமைப்பினர் பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஊர்வலமாக வந்து நீதிபதி குழு ஆலோசனை நடத்திய தண்டபாணி நிலைய பகுதியில் திரண்டனர். இவர்களில் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசிய நீதிபதி, என் மண் என் உரிமை அமைப்பினர் வழங்கிய மனுவை பெற்று கொண்டார்.

இது போல் 300க்கு மேற்பட்டோர் வழங்கிய மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது,மக்களின் தேவைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க என் மண் என் உரிமை குழுவின் சார்பாக 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us