sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்

/

லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்

லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்

லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்


ADDED : செப் 26, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் பொருட்களை ரகசியமாக கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகள், மீன் கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார்கள் வெளியானது. இதற்கு நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய, மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வு செய்தனர். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொருட்களின் கழிவுகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு உயர் அதிகாரிகள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்பு துறை தலைமை அதிகாரிகள், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்த வீடியோ கான்பிரன்ஸ் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

அரை மணி நேரம் நடந்த இதில் திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து தயாராகும் உற்பத்தி பொருட்களான பால், தயிர், வெண்ணெய், பனீர், நெய் உள்ளிட்ட பொருட்களை ரகசியமாக கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us