sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போதுமானதாக இல்லை இ சேவை மையம்: ஆதார் மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

/

போதுமானதாக இல்லை இ சேவை மையம்: ஆதார் மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

போதுமானதாக இல்லை இ சேவை மையம்: ஆதார் மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

போதுமானதாக இல்லை இ சேவை மையம்: ஆதார் மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்


ADDED : நவ 08, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநியில் ஆதார் இசேவை மையங்கள் போதுமான அளவு இல்லாததால் சேவை மைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பழநி நகராட்சி பகுதியில் தாலுகா அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், நகராட்சி அலுவலகம் என மூன்று இடங்களில் அரசு சார்பில் ஆதார் இ- சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆதார் திருத்தங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக 15 வயது மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது.

தினமும் காலையில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகளை விடுமுறை எடுத்துவர செய்து ஆதார் திருத்தங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் போதுமான அளவு ஆதார் மையங்கள் இல்லாததால் கூட்டம் அதிகரிக்கும் காரணத்தினால் சிலருக்கு மட்டும் டோக்கன் கிடைப்பதால் ஆதார் மைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

இதை கட்டுப்படுத்த ஆதார் திருத்த முகாம்களை விடுமுறை நாட்களிலும் அமைக்க வேண்டும். இதோடு ஆதார் திருத்த சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us