sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை

/

உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை

உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை

உரிமையாளர் கண் முன்பே கிணற்றில் விழுந்து இறந்த ஜல்லிக்கட்டு காளை


ADDED : பிப் 21, 2024 05:51 AM

Google News

ADDED : பிப் 21, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றில் தவறி விழுந்து உரிமையாளர் கண் முன்னே இறந்தது.

சாணார்பட்டி அருகே தவசிமடையில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை அண்டாம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவரின் காளை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்துப் பகுதிகளுக்குள் சென்றது. மாட்டின் உரிமையாளர் காளையை பல்வேறு இடங்களில் தேடினர்.இந்த நிலையில் நேற்று வேலம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்து பகுதியில் காளை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த உரிமையாளர் வினோத் அவரது துண்டை அசைத்து கூப்பிட்டார். எஜமானை கண்டு துள்ளிக்குதித்து ஓடி வந்த காளை 80 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் காளையை இறந்த நிலையில் மீட்டனர்.






      Dinamalar
      Follow us