ADDED : மே 31, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி தாலுகா அலுவலகத்தில் மே 22 முதல் நேற்று வரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சுகுமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
நேற்று ஆயக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இப்ராஹிம் 60 ,அவரது மனைவியுடன் தாலுகா அலுவலகம் வந்தார். கோதைமங்கலம் பகுதியில் அவருக்கு வழங்கிய பட்டா நிலத்தை அளந்து தர தரையில் அமர்ந்து கோரிக்கை விடுத்தார் .
அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மனுவை பெற்று கொண்டனர் . தாசில்தார் பிரசன்னா பங்கேற்றார்.