/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 30, 2024 04:54 AM
நத்தம் : நத்தம் அருகே புதுப்பட்டி வடக்குவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நேற்று முழுவதும் யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம் , முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காசி, ராமேஸ்வரம்,கங்கை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட கவுன்சிலர் சின்னாக் கவுண்டர், ஊராட்சி தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.