/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமலைக்கேணியில் கார்த்திகை விழா
/
திருமலைக்கேணியில் கார்த்திகை விழா
ADDED : பிப் 24, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கார்த்திகை பூஜை விழா நடந்தது.இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகை பூஜைகள் நடந்தது.

