ADDED : ஜன 17, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசுவாமி கோயிலில் வேண்டுதல் வைத்து காரியம் நிறைவேறினால் அரிவாள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
இக்கோயில் திருவிழா நடந்த நிலையில் அதிகாலை பொங்கலிட்டு கிடா வெட்டப்பட்டு பூஜைகள் நடந்தது. பூஜாரி வீட்டில் இருந்து கிராமத்தினர் பட்டு எடுத்தப்படி ஊர்வமாக வந்து கருப்பணசுவாமிக்கு அணிவித்தனர். இரவு 10:00 மணிக்கு கிராமத்தினர் சாமியாடிகளுடன் நேர்த்திக்கடன் அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து வந்து கருப்பண்ணசுவாமியிடம் ஒப்படைத்தனர்.