ADDED : பிப் 21, 2024 05:59 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. செயலர்கள் மங்களராம்,காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். 6ம் வகுப்பு மாணவிகள் இன்பியா, அபர்ணா வரவேற்றனர். 6ம் வகுப்பு மாணவன் அத்வைத் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி பட்டம் வழங்கினார். மாணவிகள் நிரஞ்சனா, ஆராத்ரிக்கா, மோஷிகா, மோனிஷா, ராஜநிவிதா, ஏஞ்சலின் ஜெசிகா, ஜெனிஷா, சையூரி, ரக்சனா தொகுத்து வழங்கினர். 7ம் வகுப்பு மாணவன் திருதேவ்,6ம் வகுப்பு மாணவி சனாதனா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் தலைமையில் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரியர்கள் மேலாளர் பிரபாகரன்,கார்த்திக்,ராஜசேகர்,பிரபு, ஜான் கிரிஸ்டோபர் செய்தனர்.

