/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் 'சில்'லிட்ட கொடைக்கானல்
/
மழையால் 'சில்'லிட்ட கொடைக்கானல்
ADDED : அக் 27, 2024 02:09 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க கேரள மாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து குளு குளு நகர் சில்லிட்டது.
வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில் இங்குள்ள பசுமை போர்த்திய மலைமுகடுகள், புல்வெளிகள் பச்சை பசேலென அழகுற காட்சியளித்தது.
இதைக்காண கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை ரசித்தனர். மேலும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தனர்.