sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர் வரத்தால் நிறையும் நிலையில் குடகனாறு அணை

/

நீர் வரத்தால் நிறையும் நிலையில் குடகனாறு அணை

நீர் வரத்தால் நிறையும் நிலையில் குடகனாறு அணை

நீர் வரத்தால் நிறையும் நிலையில் குடகனாறு அணை


ADDED : நவ 02, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்,: வேடசந்துார் அழகாபுரி குடகனாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ள நிலையில் 24.25 (74)அடியை எட்டி உள்ளதால் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.இதனால் சுற்றுப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. 1250 ஏக்கர் கொண்ட இந்த அணையில் 27 அடி தண்ணீர் தேக்கும் வகையில் 15 ஷட்டர்களுடன் அணை உள்ளது. இங்குள்ள இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல் ,கரூர் மாவட்டங்களில் ஒன்பதாயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போதைய மழையால் அழகாபுரி அணைக்கு நீர் வரத்து வர துவங்கி உள்ளது.

நேற்று காலை வரை 24.25 (74) அடி தண்ணீர் தேங்கிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வரத்துள்ளது.

ஆத்துார் அணை நிரம்பியதால் இதன் உபரி நீரும் குடகனாறு அணைக்கு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அழகாபுரி முதல் வெள்ளியணை வரையிலான விவசாயிகள் ,வலது பிரதான வாய்க்காலில் பணிகளை முடித்து விரைவில் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us