ADDED : பிப் 18, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஜூனியர் மாணவர்களுக்கான 33வது தேசிய அளவிலான எறிபந்துப் போட்டி கோவையில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் எஸ்.தாரகேஸ்வர் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று தேசிய அளவில் 2ம் இடம் பிடித்தார். மாணவரை பள்ளி தலைவர் ஸ்ரீதர்,துணைத்தலைவர் சந்தோஷ்,தாளாளர் ஸ்ரீ லீனா ஸ்ரீ,பள்ளி துணை முதல்வர் செல்வலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சூசை ப்ரெடரிக்,சத்யா பாராட்டினர்.