ADDED : மார் 11, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த செயற்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா,பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி தையல்நாயகி வரவேற்றார்.
கனரா வங்கி முதுநிலை மேலாளர் அல்ஜாசீர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் சுபசங்கரி, தனலெட்சுமி பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் எழில் நன்றி கூறினார்.

