/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அமுதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
/
அமுதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 02, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பாலசமுத்திரம் பொருந்தல் அமுதீஸ்வரர் கோயிலில் விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பைரவர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி பாலசமுத்திரம், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயிலில் புதிதாக விநாயகர், குழந்தைவேலாயுத சுவாமி, பைரவர் சன்னதிகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை முதற்கால வேள்வியாகம் நடைபெற்றது. நேற்று (ஜன. 1) அதிகாலை இரண்டாம் கால வேள்வி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மூன்று சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

