ADDED : ஜன 02, 2026 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வேள்வி தின விழா கொண்டாடப்பட்டது.மெய்ப்பொருள் விளக்கத்துடன் விழா தொடங்கியது.
மன்றச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கவுரவ தலைவர் பூரணச்சந்திரன் வேள்வியை நடத்தினார். மன்ற தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெகநாதன் , கல்லூரி முதல்வர் வாசுகி, பேராசிரியர்கள் பெரியசாமி, சிவபாக்கியம் பேசினர்.
பொருளாளர் அமுதவல்லி நன்றி கூறினார். துணைத் தலைவர் தனுஷ்கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

