/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 15, 2024 01:19 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 தினங்களாக இடைவிடாது மழை கொட்டியது.
இதையடுத்து அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் தாண்டிக்குடி -வத்தலக்குண்டு ரோட்டில் புல்லா வெளியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் நெடுஞ்சாலைத்துறையினர் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கொடைக்கானல் வில்பட்டி ரோட்டிலும் நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியத்திற்கு பின் மழை குறைய மேக மூட்டத்துடன் சீரான வானிலை நீடித்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது .