ADDED : அக் 28, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பைபாஸ் சாலை அருகே சென்ற வழக்கறிஞர் தனுஷ் பாலாஜியை அக் .16 இரவு மது அருந்திய நபர்கள் சிலர் தாக்கினர்.
இதுகுறித்து பதிவு செய்துள்ள வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள போலீசாரை கண்டித்தும், குற்ற பத்திரிகையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு பார் கவுன்சில் தலைவர் மணிகண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

