/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணிகள் அச்சம்
/
'கொடை'யில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணிகள் அச்சம்
'கொடை'யில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணிகள் அச்சம்
'கொடை'யில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : ஜூன் 21, 2025 09:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டுமாடு , கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் வாழைகிரி ஊத்து இடையே உள்ள வனப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வாழைகிரி வனப்பகுதியை ஒட்டிய ரோட்டோரம் சிறுத்தை சாதாரணமாக கடந்து சென்றது. இதனால் அச்சத்தில் உள்ள வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் இதில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.