sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...

/

குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...

குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...

குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...


ADDED : ஜன 08, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்கள் தொல்லை


கொடைக்கானல் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர். இதைத்தடுக்க வேண்டும்.

-துரை,கொடைக்கானல்

கட்டுப்படுத்தப்படும்


நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

-செல்லத்துரை,நகராட்சி தலைவர்,கொடைக்கானல்.

ரோட்டில் கழிவுநீர்


வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை கட்டுவதால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

---தயாளன், வேடசந்துார்.

தீர்வு காணப்படும்

உடனடியாக சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

-மேகலா,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார்.

குப்பையால் சீர்கேடு


பழநி அடிவாரம் இட்டேரி ரோடு பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதை அகற்ற வேண்டும்.

-முருகேசன்,பழநி

அகற்றப்படும்


போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களை வைத்து பணிகள் நடக்கிறது. குப்பை அகற்றப்படும்.

-தீனதயாளன்,கவுன்சிலர்,பழநி.

சீர்கேடாகும் குப்பை


சாணார்பட்டி ஊராட்சி பகுதியில் வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

-நிர்மல்ராஜா. சாணார்பட்டி.

தீர்வு காணப்படும்


சாணார்பட்டி ஊராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

-கருப்பையா, ஊராட்சி செயலர், சாணார்பட்டி.

பயன்பாடில்லா சுகாதார வளாகம்


ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது வார்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டதிலிருந்து இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

-சசிகுமார் ஒட்டன்சத்திரம்.

மாற்று யோசனை


சுகாதார வளாகத்தை பயன்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இதனால் இங்கு நுாலகம் அமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

-பழனிச்சாமி,கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.

ஆக்கிரமிப்புகளால் அவதி


சின்னாளபட்டி விலக்கு முதல் பூஞ்சோலை வரை ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

-ஜி.குமார், சின்னாளபட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்


நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

-செல்வராஜ்,செயல் அலுவலர்,சின்னாளபட்டி பேரூராட்சி.

நடுரோட்டில் மின்கம்பம்


அய்யலுார் வண்டி கருப்பணசுவாமி கோயிலிலிருந்து கஸ்பா அய்யலுார் பகுதி செல்லும் ரோட்டில் நடுவே இருக்கும் மின்கம்பத்தால் விபத்து ஆபத்து உள்ளது.

-மணிகண்டன்,குளத்துப்பட்டி.

மாற்றி அமைக்கப்படும்


பேரூராட்சி நிர்வாகம் மாற்றி அமைப்பதற்குரிய கட்டணம் செலுத்தினால் மாற்றி அமைக்கப்படும்.

-செல்வக்குமார், உதவி மின் பொறியாளர், அய்யலுார்.






      Dinamalar
      Follow us