sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எழுத்தாளராக மாற வாழ்க்கை அனுபவம் போதுமானது

/

எழுத்தாளராக மாற வாழ்க்கை அனுபவம் போதுமானது

எழுத்தாளராக மாற வாழ்க்கை அனுபவம் போதுமானது

எழுத்தாளராக மாற வாழ்க்கை அனுபவம் போதுமானது


ADDED : செப் 03, 2025 05:40 AM

Google News

ADDED : செப் 03, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''எழுத்தாளராக மாறுவதற்கு பள்ளிக்கல்வியோ, படிப்போ பெரிய அளவுக்கு தேவையில்லை. வாழ்க்கை அனுபவங்களே போதுமானது'' என சல்மா எம்.பி., பேசினார்.

திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வரும் புத்தக திருவிழா 6ம் நாள் விழா சிந்தனையரங்கம் நிகழ்ச்சியில் வாழ்க்கையும் இலக்கியமும் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது :

புத்தக கண்காட்சி அதிகம் நடைபெறும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு சமூகம் வளர்ச்சி அடைய கல்வி எந்தளவிற்கு அவசியம் என்பதை உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. 47 சதவீத பெண்கள் கல்வி கற்றவர்கள் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளனர். மாறிவரும் சமூக மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கனவுகளையும் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சிறகுகளையும் புத்தகங்கள் தரும். எழுத்தாளராக மாறுவதற்கு பள்ளிக்கல்வியோ, படிப்போ

பெரிய அளவுக்கு தேவையில்லை. வாழ்க்கை அனுபவங்களே போதுமானது.

கேரள மாநிலத்தில் எழுத்தாளர்களை மிகவும் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை கொண்டாட கூடிய நிலை இன்னும் இல்லை. தற்போது நிறைய புத்தகங்கள் புத்தக கண்காட்சியின் வாயிலாக வெளிவருகின்றன. எழுத்தாளர்களின் புத்தகங்கள் பள்ளி நுாலகங்களில் வரவேற்பு இருக்கிறது. இதை பார்க்கையில் எழுத்தாளர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டிருக்கிறது. இந்த உலகத்தை பார்க்க முடியும் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா , திண்டுக்கல் இலக்கியக்களம் துணைத்தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us