/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்சோ வழக்கில் இருவருக்கு ஆயுள்
/
போக்சோ வழக்கில் இருவருக்கு ஆயுள்
ADDED : நவ 07, 2024 01:56 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இரு போக்சோ வழக்குகளில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சை பாபநாசத்தை சேர்ந்தவர் முருகானந்தம் 33. நத்தத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இவரை சாணார்பட்டி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சரவணபிரகாஷ் 22. 2022 ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார்.
அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இவ்வழக்குகள் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன. நீதிபதி வேல்முருகன் , குற்றம்சாட்டப்பட்ட முருகானந்தம், சரவணபிரகாசுக்கு ஆயுள் தண்டனை , தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.