sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதற்கோர் வழி காணுங்க: வனவிலங்குகளால் தினம் தினம் தொல்லை

/

இதற்கோர் வழி காணுங்க: வனவிலங்குகளால் தினம் தினம் தொல்லை

இதற்கோர் வழி காணுங்க: வனவிலங்குகளால் தினம் தினம் தொல்லை

இதற்கோர் வழி காணுங்க: வனவிலங்குகளால் தினம் தினம் தொல்லை

1


ADDED : செப் 27, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி பல ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இதில் தேக்கு, சந்தனம் மரங்கள் , அரிய வகை மூலிகைகள் உள்ளன.

யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு , காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் யானை, காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதம் செய்கிறது.

விவசாயிகளை தாக்கி காயமும் ஏற்படுத்துகிறது. தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைகின்றனர்.

பெரும்பாலும் இரவில் காட்டுப்பன்றி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

சில நாட்களுக்கு முன் ஒட்டன்சத்திரம் வனச்சரகம் வண்ணாதுரை, பொன்னிமலை சித்தர் கரடு, வரதமா நதி அணை பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் விவசாயிகள் மன உளைச்சல் ஏற்படுவதுடன் பொருளாதார இழப்பும் அடைகின்றனர். வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us