UPDATED : செப் 15, 2026 10:44 PM
ADDED : செப் 15, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:தென்னம்பட்டி பகுதியில் கனிம வளத்துறை அதிகாரி ஆஞ்சலோ மெர்சி தலைமையிலான குழுவினர் ரோந்து சென்றனர்.
ரெங்கசமுத்திர குளத்தில் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்ணை அள்ளி டிப்பர் லாரியில் கடத்தலுக்காக ஏற்றினர். அவர்களை பிடிக்க முயன்ற போது வாகனங்களை அங்கேயே விட்டு தப்பி சென்றனர். லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு வடமதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகன உரிமையாளர்களை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.
