sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது

/

முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது

முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது

முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது


ADDED : மார் 21, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:சென்னையிலிருந்து திண்டுக்கல் வழியாக துாத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மதுரைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து இந்த ரயில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை வந்த போது திண்டுக்கல் ரயில்வே போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேக்கில் மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது.

அதை கொண்டு வந்த மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை 54, ரயில்வே போலீசார் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை அவர்கள் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் டில்லி - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்தவர்கள் போலீசார் வந்ததையறிந்து கழிப்பறை அருகே பொட்டலங்களை போட்டு விட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

குட்கா பொருட்களை போலீசார் உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us