sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தோழியாக பழகி 15 பவுன் நகை திருடிய மதுரை பெண் கைது

/

 தோழியாக பழகி 15 பவுன் நகை திருடிய மதுரை பெண் கைது

 தோழியாக பழகி 15 பவுன் நகை திருடிய மதுரை பெண் கைது

 தோழியாக பழகி 15 பவுன் நகை திருடிய மதுரை பெண் கைது


ADDED : டிச 25, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தோழியாக பழகி வீட்டுக்கு வந்து சென்ற மதுரை பெண் 15 பவுன் நகையை திருடி கைதானார்.

வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் முருகவேல் 50. இவரது மனைவி செல்வி 49. இவர்களது மகள் கோவையில் வசிக்கிறார். தம்பதியர் செப்டம்பரில் பழநி கணக்கம்பட்டி சித்தர் சமாதி சென்றனர். அங்கு அவர்களுக்கு மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி ஆரோக்கியமேரி அறிமுகமானார்.

நெருங்கி பழகியதால் ஆரோக்கியமேரி வத்தலக்குண்டில் உள்ள முருகவேல் வீட்டிற்கு வந்து சென்றார். கோவையில் உள்ள மகள் நகை அவர்களிடம் இருப்பதை அறிந்த ஆரோக்கிய மேரி பீரோ சாவியை திருடினார். முருகவேல் தம்பதியரிடம் மற்றொரு சாவி இருந்ததால் காணாமல் போன சாவியை பொருட்படுத்தவில்லை. முருகவேலும் செல்வியும் வெளியூர் சென்ற நேரத்தில் ஆரோக்கியமேரி இவர்கள் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்றார்.

போலீசார் அலைபேசி தடயங்களை வைத்து ஆரோக்கியமேரியை கைது செய்து 15 பவுன் நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us