ADDED : டிச 08, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:மதுரை மேல கள்ளந்திரியை சேர்ந்தவர் பால்சாமி மனைவி மகாலட்சுமி 28. திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. நேற்று முன்தினம் மோதிரம் வாங்க செல்வதாக கூறி சென்றவர் மாயமானார்.
உறவினர்களிடம் தான் திரும்ப வரமாட்டேன் எனக்கூறி உள்ளார். இந்நிலையில் மேல கள்ளந்திரியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் கொடைக்கானல் சென்ற விவரம் தெரிய வந்தது.
இருவரும் இங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
மகாலட்சுமி அங்கு இறந்து கிடந்தார். அறையில் பூச்சிமருந்து வாடை வீசியது.
சசிகுமாரை கைது செய்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.