ADDED : நவ 13, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெங்கலவயல் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உதவி வன பாதுகாவலர் சக்திவேல் தலைமையில் கால்நடை டாக்டர் கலைவாணன் முன்னிலையில் யானை உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் காயம் ஏற்பட்டதில் இறந்துள்ளதாக வனத்துறையால் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து யானை அடக்கம் செய்யப்பட்டது.

