sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயில் பயணியிடம் நகை திருடியவர் அரை மணி நேரத்தில் கைது

/

ரயில் பயணியிடம் நகை திருடியவர் அரை மணி நேரத்தில் கைது

ரயில் பயணியிடம் நகை திருடியவர் அரை மணி நேரத்தில் கைது

ரயில் பயணியிடம் நகை திருடியவர் அரை மணி நேரத்தில் கைது

1


ADDED : ஜன 30, 2025 07:57 PM

Google News

ADDED : ஜன 30, 2025 07:57 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:பூவனுாரிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் பயணித்தவரிடம் 17 பவுன் நகையை திருடிய திண்டுக்கல் காரரை ரயில்வே போலீசார் அரை மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்டனர்.

தேனி மாவட்டம் வெங்கடசலபுரம் மேற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலாஜி26. இவர் சொந்தமாக தனக்கு வீடு கட்டி கொண்டிருந்தார். அதற்கு செலவு செய்ய பணம் தேவையான நிலையில் உளுந்துார்பேட்டை பூவனுார் அருகே உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று

அங்குள்ள உறவினர்களின் நகையை வாங்கி வந்து அடகு வைத்து வீட்டு வேலையை செய்ய முடிவு செய்து 2 நாட்களுக்கு முன் திண்டுக்கல்லிலிருந்து பூவனுாருக்கு சென்றார்.

பாலாஜி, நேற்று முன்தினம் சித்தி வீட்டிலிருந்து 17 பவுன் நகையை பேக்கில் எடுத்து கொண்டு பூவனுார் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து விழுப்புரம் டூ திண்டுக்கல் வரும் பயணிகள் ரயிலில் ஏறினார். இரவு 10:15 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தது. பாலாஜி, அயர்ந்து துாங்கினார். அப்போது பேக்கை பாலாஜி, சரியாக கவனிக்காதநிலையில் அதை மர்ம நபர் ஒருவர் திருடினார். இரவு 10:30 மணிக்கு பாலாஜி, திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்தார்.

இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி, எஸ்.ஐ.,அருணோதயம், மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் மர்ம நபர் துாக்கி சென்ற பேக்கிலிருந்த அலைபேசி எண்ணை வைத்து அரை மணி நேரத்தில் பேக்கை திருடிய திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஜான்கென்னடி37,கைது செய்து நகை, அலைபேசியை மீட்டு பாலாஜியிடம் ஒப்படைத்தனர். ஜான் கென்னடி,மீது ஏற்கனவே தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us