/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி
/
திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி
ADDED : ஜன 22, 2026 05:48 AM

திண்டுக்கல் ஜன.22-: திண்டுக்கல் யங் இந்தியன்ஸ், மாவட்ட காவல்துறை, தடகள அமைப்பு, பார்வதீஸ் கலைக் கல்லுாரி சார்பில் மாரத்தான் 2026' போட்டி நடந்தது. ஆண்களுக்கு 10 கி.மீ., துாரம், பெண்களுக்கு, சிறார்களுக்கு 5 கி.மீ., துாரம் என நடந்த இதில் 3500 பேர் பங்கேற்றனர்.
முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு ரொக்கப்பரிசு , பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. யங் இந்தியன்ஸ் திண்டுக்கல் கிளைத் தலைவர் கிரண் பாலாஜி, துணைத் தலைவர் சாய்குமார், முன்னாள் தலைவர் வினோத்பாலசுந்தர், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, தடகள சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி இயக்குனர் பிரவீன், இணை இயக்குனர் ஜனனி, வடமலையான் மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திகேயன், அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அனிஸ்பாத்திமா பங்கேற்றனர்.

