sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மோர்பட்டி பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

/

மோர்பட்டி பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

மோர்பட்டி பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

மோர்பட்டி பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : அக் 04, 2024 06:51 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : தினமலர் செய்தி எதிரொலியால் வடமதுரை மோர்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் ஆய்வு செய்தார்.

வடமதுரை மோர்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரு கட்டடங்கள் இருந்த நிலையில் ஒரு கட்டடம் சிலஆண்டுகளுக்கு முன் சேதமாகி அகற்றப்பட்டது.

மற்றொரு கட்டடமும் சேதமாகி பள்ளி வாடகை கட்டடத்திற்கு மாறியது. புதிய கட்டடம் அமைவதில் இழுபறி இருக்கும் நிலையில் பயனற்று கிடக்கும் பள்ளி வளாகத்திற்கு ரூ.பல லட்சம் செலவில் சுற்றுச்சுவர் பணி துவங்கியதால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது.

இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் பள்ளியில் ஆய்வு செய்தார்.

புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை சுற்றுச்சுவர் பணியை நிறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, ஊராட்சி தலைவர் சிவசக்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நிர்வாகிகள் பாண்டி, கணேசன், கருப்பன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us