ADDED : டிச 17, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சில வாரங்களாக பகல் நேரங்களிலும் வெயில் தெரியாத அளவிற்கு பனி உள்ளது. இதனால் காலை 9 :00மணி வரைக்கும் குளிர் நிலவுகிறது. மாலை 4:00 மணி முதல் மூடுபனி தொடங்குவதால் இரவில் கடும் குளிர் நிலவுகிறது.
நேற்று காலை முதல் 11:00 மணி வரைக்கும் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டமாக இருந்தது. மழை பெய்யும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. திடீரென மதியம் 2:35 மணிக்கு மீண்டும் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழைக்கு அச்சாரமிட்டன.
தொடர்ந்து சாரலாக பெய்த மழை மாலை 5:00 மணிக்கு மிதமான மழையாக நகரம் முழுவதும் 20 நிமிடம் பெய்தது.
இதனால் ஏ.எம்.சி.,சாலை, ஜி.டி.என்.சாலை, கார்ப்பரேஷன் ரோடு, பழநி ரோடு, வத்தலகுண்டு ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

