/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கனவு இல்லம் கட்ட பணம்; விடுதிகள் பெயரை மாற்றாதீங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
கனவு இல்லம் கட்ட பணம்; விடுதிகள் பெயரை மாற்றாதீங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கனவு இல்லம் கட்ட பணம்; விடுதிகள் பெயரை மாற்றாதீங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கனவு இல்லம் கட்ட பணம்; விடுதிகள் பெயரை மாற்றாதீங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : ஜூலை 22, 2025 04:10 AM
திண்டுக்கல்: கனவு இல்லம் கட்ட பணம் கேட்பு, ஆக்கிரமிப்பை அகற்றி கொடுங்க, விடுதிகள் பெயரை மாற்றாதீங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 300 க்கு மேற்பட்ட மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அய்யலுார் அருகே தங்கம்மாபட்டியை அடுத்த முடக்குப்பட்டியை சேர்ந்த 10 க்கு மேற்பட்டோர் அளித்த மனுவில், முடக்குப்பட்டியில் உள்ள அரசு இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை அமைத்து வசித்து வருகிறோம். அதன் அருகே அரசு பள்ளி உள்ளது.
இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக நாங்கள் வசித்துவரும் பகுதியை தேர்வு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் எங்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அளித்த மனுவில், அரசு கள்ளர் பள்ளிகள் ,விடுதிகளுக்கு சமூகநீதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை ரத்து செய்து மீண்டும் கள்ளர் என்ற பெயரிலே இயங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
கனவு இல்லம் கட்ட பணம் இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வடமதுரையை சுற்றிய கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்காக 200 க்கு மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவது தொடர்பான பரிந்துரை வழங்குவதற்கு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காதுகேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் நியமிக்க வேண்டும். அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கோயிலை சுற்றி சிலர் இரும்பு கம்பிகளால் ஆன கேட்டுகளை வைத்து அடைத்து ஆக்கிரமித்துள்ளனர். வழிபாடு நடத்த முடியவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்து.