sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...

/

ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...

ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...

ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...


ADDED : அக் 28, 2024 04:44 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செடிகள் படர்ந்த டிரான்ஸ்பார்ம் : வடமதுரை குரும்பபட்டியில் டிரான்ஸ்பார்மரில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கண்ணன், குரும்பபட்டி.

-

கொசு உற்பத்தியாகும் கழிவுநீர் : திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிசாமி, திண்டுக்கல்.

ரோட்டோரங்களில் தேங்கும் மணல் : திண்டுக்கல்- திருச்சி ரோட்டோரங்களில் அதிகளவில் மணல்மேவி உள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மணலை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுவாதி,திண்டுக்கல்.

---------ஜல்லிக்கற்கள் பெயர்ந்த ரோடுகள் : கோபால்பட்டி கோம்பைபட்டி ஊராட்சி பாப்பம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குண்டும்,குழியுமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், பாப்பம்பட்டி.

---------பாதியில் நிற்கும் பணிகள் : தாண்டிக்குடி மங்களம்கொம்பில் அரசு கட்டித் தரும் பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீடு பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். வீட்டை முழுமையாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தாண்டிக்குடி.

குப்பையால் சீர்கேடு : வத்தலக்குண்டு பேரூராட்சி காந்திநகர் கிழக்கு பகுதி ரோட்டில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இங்கு மழைநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தினமும் இங்குள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.சுருளியப்பன், வத்தலக்குண்டு.

----------

மழைநீரால் அவதி : பழைய கன்னிவாடி ஆரம்பப்பள்ளி செல்லும் வழியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள்,பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், பழைய கன்னிவாடி.






      Dinamalar
      Follow us