/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்சாரம் தாக்கி தாய் பலிமகன், மகள் காயம்
/
மின்சாரம் தாக்கி தாய் பலிமகன், மகள் காயம்
ADDED : செப் 13, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி 50. நேற்று முன்தினம் இரவு துணி துவைத்த துணிகளை வீட்டினுள் இருந்த கொடி கம்பியில் காய வைத்தார்.
மின் கசிவின் காரணமாக ஜோதியின் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறி துடித்த ஜோதியை அவரது மகன் சவுந்தரபாண்டி 28, மகள் ராஜேஸ்வரி 30, காப்பாற்ற முயன்றனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து மூவரையும் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோதி இறந்தார். இருவரும் சிகிச்சையில் உள்ளனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.