ADDED : டிச 31, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் நடந்த தாக்குதலை கண்டித்தும், திண்டுக்கல் மாவட்டத்தில் மதவாத பிரிவினை ஏற்படுத்தும் கும்பல்களை கண்டித்தும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாக்கியம், கன்னியாஸ்திரி குழந்தை தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் வாலண்டினா, மாவட்டச்செயலாளர் பாப்பாத்தி ,பாதிரியார் பிலிப் சுதாகர் பேசினர். பொருளாளர் சுமதி, நிர்வாகிகள் பாண்டியம்மாள், கவுரி, வனஜா, ஷோபாதிலகம் கலந்துகொண்டனர்.

