ADDED : ஜன 29, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி பாலாறு,பொருந்தலாறு வனப்பகுதிகளில் யானை நடமாட்டம் அடிக்கடி உள்ளது.
கடந்த சில நாட்களாக பொருந்தல் புளியம்பட்டியில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இரண்டு குட்டிகளுடன் யானைகள் உலா வருவது போன்று மலையடிவாரப் பகுதியிலிருந்த தோட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. யானைக்கு தொந்தரவு செய்யக்கூடாது. யானைகளை பார்க்க நேர்ந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.