/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திரிபுராவில் கொலை திண்டுக்கல்லில் கைது
/
திரிபுராவில் கொலை திண்டுக்கல்லில் கைது
ADDED : மார் 19, 2025 03:06 AM
திண்டுக்கல்:திரிபுராவில் கொலை செய்து தப்பி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நபரை தகவல் வந்த 8 மணி நேரத்தில் திண்டுக்கல் போலீசார் கைது செய்து அம்மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திரிபுராவை சேர்ந்தவர் ரோஸாங்லா ரியாங்27. பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு தமிழகத்திற்கு வந்தார். சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 மாதமாக சுற்றித்திரிந்த ரியாங்கை அம்மாநில போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ரியாங் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு எழில் நகர் பகுதியில் சுற்றியுள்ளார்.
திரிபுரா போலீசார் திண்டுக்கல் போலீசாரிடம் உதவி கோரினர். குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ரவிசங்கர் தலைமையிலான போலீசார் ரியாங்கின் அலைபேசி எண்ணை வைத்து நேற்று மதியம் 3:00 மணிக்கு அவரை கைது செய்து திரிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திண்டுக்கல் வந்த திரிபுரா போலீசாரிடம் ரியாங்கை, ஒப்படைத்தனர்.