ADDED : ஏப் 19, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்::
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அம்ஜா தலைமை வகித்தார். செயலாளர் இப்ராம்ஷா வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். கம்யூ., எம்.பி., சச்சிதானந்தம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, காங்., மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், வி.சி.க., மாவட்ட செயலாளர் மைதீன் பாவா பேசினர்.

