ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : வேடசந்தூர் அரியபந்தம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திகை செல்வி 35.
இவர் இந்திரா நகர் அருகே தன்னுடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக போர்வெல் அமைத்துள்ளார். 380 அடி ஆழம் போர்வெல் அமைக்கப்பட்ட நிலையில் நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், மோட்டார் பைப் லைனை அமைத்துள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் ஜேசிபி., எந்திரம் மூலம் ஆழ்துளை போர்வெல்லை அடித்து நொறுக்கி போர்வெல் குழாயில் மண், கற்களை போட்டு மூடி விட்டுச் சென்று விட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.