sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்; தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

/

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்; தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்; தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்; தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


ADDED : ஜன 28, 2025 12:44 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் பிற மாவட்ட முதுகலை ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் செய்ய தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல்லில் அச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, தர்மபுரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 100 முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடுமையாக உழைத்து நல்ல தேர்ச்சி சதவீதமும் தருகின்றனர்.

இவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

மனமொத்த மாறுதலில் ஆசிரியர்கள் செல்லலாம் என்ற ஆணை இருந்தாலும் கூட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தான் இதுபோன்ற மாறுதல் கிடைக்கின்றன.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால் இவர்கள் உடலாலும், மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நலனில் அக்கறை செலுத்தி சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் ஆணை வழங்குவதுடன், இதனால் ஏற்படும் ஆசிரியர் தேவையை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us