sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு

/

வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு

வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு

வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு


ADDED : மார் 19, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி : கோடைகாலத்தில் ஆண்டுதோறும் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல் இந்தாண்டும் வனத்துறை அலட்சியம் தொடர்கிறது. அரிய வன உயிரினங்கள், மரங்கள் அழியும் அவலம் குறைக்க ஏட்டளவு நடவடிக்கைகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள், வாழிடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொள்கின்றன. மலைப்பகுதி, அடிவார கிராமங்களில் பரவலாக தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது.

தனியார் பட்டா நிலங்கள் மட்டுமன்றி வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் பராமரிப்பில் உள்ளன. ஆண்டுதோறும் கோடை கால துவக்கம் முதலே வன வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவதுடன் வன உயிரினங்கள், தாவரங்களை அழிக்கும் காட்டுத்தீ பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதில் மனித செயல்பாடுகளின் அலட்சியம், ஆக்கிரமிப்பு, முறைகேடான செயல்கள் போன்றவற்றுகாக காட்டுத் தீ பெயரில் செயற்கையான முறையில் இது போன்ற வளங்கள் அழிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

வெப்பநிலை, காற்றின் வேகம், மண் , காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு, வறட்சி, வெப்ப சூழலில் மரங்கள் உராய்வு போன்ற காரணங்களால் இயற்கையான தீ ஏற்படுகிறது. இதனால் மழைப்பொழிவு பாதிப்பு, அதிக வெப்பநிலை, வறண்ட சூழ்நிலை போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.

வழித்தடம், வனவிலங்கு ஊருக்குள் நுழைவதை தடுத்தல், சுற்றுலாப் பயணிகளால் அலட்சியமாக எறியப்படும் தீ பற்றக் கூடிய பொருட்கள் போன்ற மனித நடவடிக்கைகளால், காட்டுப் பொருட்கள், மரங்களில் தீ வைக்கப்படுவது பரவலாக அதிகரித்துள்ளது. மேற்பரப்பில் உள்ள காய்ந்த குப்பை மட்டுமின்றி மரங்கள், அரிய மூலிகை தாவரங்கள் அழிந்து அடர் புகையை உருவாக்குகிறது. வன உயிரினங்கள் வாழ்விடத்தை இழந்து அழிவதுடன் அடிவார கிராமங்களை நோக்கி படையெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கிய நிலையில், இனிமேலும் தாமதத்தை வனத்துறை தவிர்க்க முன்வர வேண்டும். இப்பிரச்னையை கட்டுப்படுத்தும் வகையிலான வனத்துறையின் தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.

ஏட்டளவு நடவடிக்கையால் பாதிப்பு

ஆண்டுதோறும் காட்டுத்தீ பாதிப்பு வாடிக்கையாக தொடர்கிறது. வன வளங்கள் பாதிப்படையும் அவலத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வனத்துறை முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும். பெயரளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக ஆவணப்படுத்திக் கொள்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை சரிவர கள ஆய்வுப் பணியில் ஈடுபடுவதில்லை. அப்பாவி விவசாயிகளை அச்சுறுத்தி வருவாய் ஆதாயம் பார்ப்பதில் மட்டுமே மும்முரம் காட்டுகின்றனர். மரக்கடத்தல் வன உயிரின வேட்டை, அரசியல் அதிகாரத்திற்கு ஆதரவு போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். காட்டுத்தீ குறித்த தகவல் தெரிவித்தாலும் அலட்சியப்படுத்துகின்றனர். 'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது போல் ஆவண அடிப்படையில் மட்டுமே விழிப்புணர்வு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இப்பிரச்னையால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனவளம் அழிவது வழக்கமாக தொடர்கிறது. ராமச்சந்திரன் ,சமூக ஆர்வலர், கெம்மனம்பட்டி ரெட்டியார்சத்திரம் .








      Dinamalar
      Follow us