/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்
/
பழநி கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்
ADDED : ஏப் 24, 2025 03:15 AM

பழநி:பழநி முருகன்  கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் கோயில் நிர்வாகத்திடம் பேட்டரி பஸ்  வழங்கினார்.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களின் கிரிவீதியில் பயணிக்க கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக பேட்டரி கார் , பஸ்களை இயக்கி வருகிறது. போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் சார்பில் உரிமையாளர் போத்திராஜ் ,அவரது குடும்பத்தினர் , 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து   பெற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். துணை கமிஷனர் வெங்கடேஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம்  பங்கேற்றனர்.
தற்போது கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 11 பேர் அமரக்கூடிய பேட்டரி கார்கள் 17 உள்ளன. 23 பேர் அமரக்கூடிய பேட்டரி பஸ் 9 உள்ளது.  டீசல் மினி பஸ் இரண்டு இயக்கப்பட்டு வருகின்றன.

