செம்பட்டி: மார்கழி அமாவாசையை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில், மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன், மகாதீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
சாணார்பட்டி : -சாணார்பட்டி மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
மகா பிரத்தியங்கிரா தேவி யாகம்
யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூடை மூடையாக கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்றவர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டினர்.
கோசாலையில் வளர்க்கப்படும் சுமார் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.