ADDED : பிப் 08, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பாடியூரில் அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா, உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ப.முருகேஸ்வரி தலைமை வகித்தார். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி சகாயராணி வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் ஆர்.முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் பால்ச்சாமி, இன்ஸ்பெக்டர் கண்ணன், பி.டி.ஓ.,பாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் குழந்தை தெரஸ், சந்திரா பங்கேற்றனர்.