sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... தியாகிகள் குழுவிற்கு வரவேற்பு

/

செய்திகள் சில வரிகளில்... தியாகிகள் குழுவிற்கு வரவேற்பு

செய்திகள் சில வரிகளில்... தியாகிகள் குழுவிற்கு வரவேற்பு

செய்திகள் சில வரிகளில்... தியாகிகள் குழுவிற்கு வரவேற்பு


ADDED : ஜன 02, 2025 05:42 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகிகள் குழுவிற்கு வரவேற்பு

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் 24வது மாநில மாநாட்டில் ஏற்றுவதற்காக மதுரையிலிருந்து தியாகிகள் நினைவு கொடி பயணம் புறப்பட்டது. வில்லாபுரத்திலிருந்து துவங்கிய இப்பயணம் நேற்று திண்டுக்கல் வந்தது. பேகம்பூரில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகம் முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் அரபுமுகமது வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், பாலபாரதி, சின்னதுரை, எம்.பி.,சச்சிதானந்தம் பேசினர். ஒன்றிய செயலாளர் சரத்குமார் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராணி, முத்துச்சாமி, ஆஸாத், அஜாய்கோஷ்,பாலாஜி பங்கேற்றனர்.

புத்தக நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் கணேசன் பேசினார். திண்டுக்கல் இலக்கியக்களத்தின் தலைவர் மனோகரன்,செயலர் ராமமூர்த்தி,பொருளாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் சரவணன்,நிர்வாகிகள் சிவபாலன்,தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மாநில கருத்தாளர் ஆல்பர்ட் பங்கேற்றனர்.

உலக நல வேள்வி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் உலக நல வேள்வி விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தவம் பேசினார். செயலர் பழனிசாமி வரவேற்றார். மண்டல செயலர் பாலசுந்தர் நன்றி கூறினார்.

உணவு அங்காடி திறப்பு

வடமதுரை: வடமதுரையில் மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண்மை கூட்டுறவு முகமை நிதி உதவி, பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லுாரி வழிகாட்டுதலுடன் நல்லேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்குகிறது. இந்நிறுவனம் சார்பில் இயற்கை உணவு பொருட்கள் அங்காடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நேற்று திறக்கப்பட்டது. தலைவர் கணேசன் திறந்து வைத்தார். யுவர் பார்ம்ஸ் விற்பனை மேலாளர் ரகுநாதன், முதன்மை செயல் அலுவலர் கார்த்திக் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us