/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடிகால் இல்லை; தெருக்கள் எங்கும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளின் பிடியில் கூட்டுறவு நகர் குடியிருப்போர்
/
வடிகால் இல்லை; தெருக்கள் எங்கும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளின் பிடியில் கூட்டுறவு நகர் குடியிருப்போர்
வடிகால் இல்லை; தெருக்கள் எங்கும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளின் பிடியில் கூட்டுறவு நகர் குடியிருப்போர்
வடிகால் இல்லை; தெருக்கள் எங்கும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளின் பிடியில் கூட்டுறவு நகர் குடியிருப்போர்
ADDED : டிச 22, 2024 06:54 AM

திண்டுக்கல் : சேதமான ரோடுகள்,எப்போதும் தண்ணீர் தேங்கி தீவு போல் உள்ள பூங்கா,அணையாமல் எரியும் தெருவிளக்குகள்,வடிகால்கள் இல்லாத தெருக்கள்,கழிவுநீரியில் ஜோராக நடக்கும் கொசு உற்பத்தி,ரோட்டோரங்களில் தேங்கியிருக்கும் குப்பை என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் கூட்டுறவு நகர் குடியிருப்போர்.
திண்டுக்கல் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்க கவுரவ ஆலோசகர் பச்சையப்பன்,செயலாளர் அமரசுந்தரி,பொருளாளர் சசிகலா,கவுரவ தலைவர் ரமாசீனிவாசன்,நிர்வாகிகள் ராகிணி,முத்துமாலா,மரகதம்,ராஜேஸ்வரி,சிறப்பு ஆலோசகர் ராஜேந்திரன் கூறியதாவது: கூட்டுறவு நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பல பகுதிகளில் ரோடுகள் சேதமாக உள்ளது. புகார்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மழை நேரங்களில் காவேரி தெருவில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. மல்லிகை தெருவில் உள்ள பூங்கா 3 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பில்லாமல் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமாகி துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது.
மழை நேரம் மட்டுமில்லாமல் இப்பூங்காவில் வெயில் நேரங்களிலும் தண்ணீர் தேங்கி நடை பயிற்சி மேற்கொள்ள வரும் மக்களை பாடாய்படுத்துகிறது.
எங்கு பார்த்தாலும் புற்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கிறது. பூங்காவை ஒருமுறை சீரமைத்து தந்தால் மட்டும் போதும் அதிலிருந்து எங்கள் சங்கத்தினரே பராமரித்து கொள்கிறோம். மல்லிகை தெருவில் தெரு விளக்குகள் பகல் நேரங்களிலும் எரிவதால் மின்சாரம் தான் செலவாகிறது. அதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
நக்கீரன் தெருவில் வடிகால் இல்லாததால் எந்நேரமும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் எங்கள் பகுதி முழுவதும் சுகாதாரக்கேடாய் மாறி தொற்றுபரப்பும் நிலை உள்ளது. மழைநேரங்களில் சொல்லவே வேண்டாம் .அந்த அளவிற்கு கழிவுநீர் தேங்குகிறது. பகல்மட்டுமில்லாமல் இரவிலும் கொசுக்கள் மக்களை கடிக்கிறது.
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் இருப்பதால் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கள் பகுதியை மறந்து விடுகின்றனர்.
குப்பை முறையாக அள்ளாததால் ரோட்டோரங்களில் பல பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது.
தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மக்கள் ரோடுகளில் நடமாட முடியவில்லை. வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனை அகற்ற வேண்டும் என்றனர்.